KILIYANUR ONLINE

Thursday 30 June 2011

நான் மட்டும் தனியாக..

பட்டம் வாங்கியதும்
சுற்றித் திறிந்தேன்
இறக்கைக்கட்டி!

அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும்
அம்மாவுக்குசெல்லமாக!

கடவுச் சீட்டு
கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!

திட்டித் தீர்க்கும் தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!

கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!

வம்புச் செய்யும்தம்பியோ
தேம்பி அழுதான்!


அடிக்கடி அடிக்கும்அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!

என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டதுபாசம்
எனை வென்றது;

தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!

ஒட்டி உறவாடிய நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!

இப்போதுநான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!

வருமானத்திற்காக
வளைகுடாவில் செரிமாணமாகாத
நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!

Thanks & Regards..? A.R. Mohamed Sadiq

No comments:

Followers