KILIYANUR ONLINE

Monday 18 July 2011

மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்

சாதராணமாக நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம். வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.
அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே நினைத்து கொள்ள வேண்டாம்.
உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இ-ருக்க கூடும்.
உங்களுக்கு தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின் போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின் போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால் அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.
மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாதலால் ஏற்படும் அறிகுறிகளாவன:
நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, நெஞ்சு இறுக்கம், மூச்சு திணறல், இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில் கூட வலி பரவுதல், பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றும்.
பெண்களுக்கு மூச்சு திணறல், மேல் வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும். அறிகுறிகளை தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யலாம்.
எனவே நெஞ்சு வலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.

No comments:

Followers