KILIYANUR ONLINE

Friday 15 February 2013

பேச்சு,மெளனம்


அறிவுள்ள மினிதர்கள் மெளனமாகவே இருப்பர்.

மெளனமானது சொற்களிலும் மிகவும் வன்மையானது.

நாவுதான் மனிதனிடமுள்ள மிகச்சிறந்த அங்கமாகும்.

ஒரு மனிதனின் பேச்சானது அவன் எத்தகைய மனம் பெற்றுள்ளான் என்பதைக் காட்டிவிடும்.

நாவு விஷயத்தில் அவசரம் வேண்டாம். சொற்கள் வெள்ளியென்றால், மெளனம் பொன்னாகும்.

அறிந்தவையனைத்தையும் சொல்ல வேண்டுமென்பதில்லை.

அறிவு விரியும்போது பேச்சு சுருங்குகிறது.

காக்கப்படா நாவு பெருந்தீங்கு புரிந்து விடலாம்.

நா காப்பது ஒரு மனிதனின் இயல்பில் மிகச் சிறந்ததாகும்.

நீண்ட சிறைத் தண்டனைக்குரியது உலகில் நாவைத் தவிர்த்து வேறு எதுவுமில்லை.

கூற வேண்டாததைக் கூறும் ஒருவன், கேட்க விரும்பாததைக் கேட்க வேண்டி வரும்.

அதிகம் பேசுபவன் குறைவாய்ச் செயல் புரிவான்.

No comments:

Followers