KILIYANUR ONLINE

Tuesday 12 March 2013

பறைவைகளே !... பதில் சொல்லுங்கள் !


வலைத்தளத்தில் உலாவரும் பதிவுகளைப் பார்க்கும்போதும், அதற்குத் தூபம் போடும் வகையில் ஊடகங்களின் ஊதுகுழல் பொறுப்பற்று வேலை செய்வதைப் பார்க்கும்போதும், நமது நாட்டின் அப்பாவி மக்களின் மனதில் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான வெறுப்பினை வளர்க்கும் ஒரு சதிவேலை அறங்கேறிக் கூத்தாடுவதாகத்தான் தோன்றுகிறது.
தெளிவான சிந்தனையுள்ள தேசபக்தர்களின் ஆதரவில்லாவிட்டால், பல கேடுகள் விளைந்திருக்கும், நல்லவர்களை நாடெங்கும் விதைத்து வைத்த வல்ல இறைவனை இத்தருணத்தில் நான் புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன்.
புகழுக்குறிய இறைவன் காட்டிய நேரான பாதையை உள்ளத்தாலும் செயலாலும் கொள்ளாது வெளித்தோற்றத்தால் மட்டும் கொண்டு வெறிபிடித்தலையும் கயவர்களையும் கண்டிக்கிறேன். தீமை ஒழிய வேண்டும், அது நன்மையைக் கொண்டு மட்டுமே வெல்லப்பட வேண்டும். அதுதான் நிரந்தர வெற்றி
.
இன்று ஊடகங்கள் வெடிக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்டு மனத்தளவில் குற்றுயிராய்க்கிடக்கும் உணர்வில் பலர். ஊடகங்களோ அடையாளம் காட்டுவது முஸ்லிம்களை.  இதுதான் காரணம், ஆக யாருக்குமே வெறுப்பு வருவது இயல்பு.  இது வெடித்து வைக்கும் மீடியாக்களுக்கும் தெரிந்த உண்மைதான் (சில சக்திகளின் நோக்கமும் அதுதானாயிருக்கலாம்
).
நமது முறையீடெல்லாமே படைத்தவனோடுதானே? ஆகவே அழுதே கேட்போம்!
"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா !" (கண்ணதாசன்
)
இன்று உள்ளவர்க்கெதிராய் சாட்சிகள் ரெண்டு
ஒன்று (மிரட்டப்பட்ட)  உங்கள் சாட்சி
ஒன்று (மீடியாவின்) வஞ்சகக் காட்சியம்மா
!!
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லார்
அவனையே தொழுது கேளுங்கள்
!
அவனன்றி நமக்கு வேறு ஆருதல் இல்லை!
பறைவைகளே !... பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் பரப்பும் செய்தி உண்மையில்லையே
மனதினில் வெறுப்பு தவிர வேறு இல்லையே
பறவைகளே! ..  பதில் சொல்லுங்கள்!
படைத்தவன் நினைப்பு என்ன பார்த்துச் சொல்லுங்கள் !
அடுத்தொரு உலகம் என்று உரத்துச் சொல்லுங்கள்!
Facebook: Nsm Shahul Hameed

No comments:

Followers