KILIYANUR ONLINE

Tuesday 25 January 2011

இறையருட்பா

பாவிக ளானதால் நாமே
பாழ்படப் போவது மாச்சு
நோவினை யாகவே தானே
நோய்களும் கூடுத லாச்சு
மேவிடும் தாகமாய்க் காதல்
மேனியின் மீதிலே யாச்சு
தாவிடும் காமுகத் தீயால்
தாழ்ந்திடும் கேவல மாச்சு

தாயினும் கூடுத லாயே
தானமாய்ப் பேரருள் காட்டும்;
தீயினை தூரமாய்ப் போக்கும்;
தீதினை ஓட்டுத லாக்கும்
ஆய்வினை வான்மறை மூலம்
ஆதியாய்க் கூறுமி றைவா
ஓய்விலா மூச்சிலுன் பேரை
ஓதிட வேண்டிய ருள்வாய்


“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

No comments:

Followers