KILIYANUR ONLINE

Sunday 7 August 2011

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க!! அரும் மருந்து!!

இன்றைய காலகட்டத்தில் இரத்தக் குழாய் அடைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இதனை எளிமையாக தவிர்த்து விடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். இதற்க்கு அடுத்த பெரும் பிரச்சனை இரத்த அழுத்தம்.
இதனை முற்றிலுமாக போக்க ஒரு எளிய வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு மற்றும் சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

2 comments:

துளசி கோபால் said...

தகவல்களுக்கு நன்றி.

முயன்று பார்க்கிறேன்.

கிளியனூர் ஆன்லைன் said...

மிக்க நன்றி துளசி கோபால்

Followers