KILIYANUR ONLINE

Wednesday 16 November 2011

லேப்-டாப் உஷார்!

கோல்கட்டா : கோல்கட்டாவில், கட்டிலில் படுத்தவாறு லேப்-டாப்பை இயக்கிய இளைஞர், மின்சாரம் தாக்கி பலியானார்.கோல்கட்டாவில், பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் சாயன் சவுத்ரி, 34. இவரது மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால், தாய் வீட்டில் தங்கியிருந்தார். கோல்கட்டாவில் உள்ள வீட்டில் தனியாக தங்கியிருந்த சாயன் சவுத்ரி, நேற்று முன்தினம் இரவு கட்டிலில் படுத்தவாறு, லேப்-டாப்பை இயக்கிக் கொண்டிருந்தார். லேப்-டாப் சார்ஜருடன் இணைக்கப்பட்டிருந்தது. இவர் தலையில், ஹெட்போனுடன் லேப்-டாப்பை இயக்கி கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி பலியானார். சார்ஜர் ஒயர் கருகி கிடந்தது. எனவே, இவர் மின்சாரம் தாக்கி பலியாகியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது அவரது உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

லேப்-டாப்பை சார்ஜரில் இணைத்தவாறு இயக்கிய, ரோமானியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த இரண்டு பேர், ஏற்கனவே பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் தான் சாயன் சவுத்ரியும் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

News

No comments:

Followers