KILIYANUR ONLINE

Sunday 3 July 2011

உன் கண்ணால் நான் பார்க்கிறேன்

விளக்கேற்றுங்கள்
வெளிச்சத்தை அறியாத
என் விழிகளில்

பார்வையற்ற எனக்குப்
பரிசளியுங்கள்
பகலை

மரணம்
உங்களுக்குத்தான்
உங்கள்
கண்களுக்கல்ல

பிறருக்குக்
கண்ணாடியாய் இருப்பதே
பெருமைக்குரியது.
நீங்கள் என்
கண்ணாகவே இருங்களேன்…

நீங்கள்
கண் மூடிய பிறகும்
உங்கள் கண்கள்
திறந்து கொள்ளட்டும்
என் முகத்தில்
இந்த உலகை
எத்தனைக் காலம் நீங்கள்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்…

இறந்தபின் கண்களை
இரவல் தாருங்களேன்…
நானும் பார்த்து
நனைகிறேன் இதயம்.

செத்தும் கொடுத்தவன்
சீதக்காதி மட்டும் தானா?

உங்களுக்கும் அந்த
கௌரவம் தருமே
கண்தானம்
--கவிஞர் மு. மேத்தா

No comments:

Followers